Saturday, July 2, 2011

அழுவவனும் நானே

அன்பே
சின்ன விஷயங்கள் நம்மை
சீண்டி பார்க்கின்றன..
சில நேரங்களில் என்னை நானே வெறுக்கின்றேன் .
இது சொல்ல முடியாத உறவு..
அள்ள முடியாத கனவு...
நீ சொன்ன வார்த்தைகள் என்னில்
இன்னும் முள்ளாய்...
உனக்கு தெரியுமா..
வெறுப்பது நீஎன்றாலும்
விரும்புவது நானல்லவா...?
உன்னைக்காணும் முன்
உன்னைக்கண்ட பின்
என என்னில் இரு வாழ்க்கை..
தோட்டத்தில் விதை விதைத்து
துளிர் வருவதற்குள்
மறைந்து போனவள்  நீ
உன் காதல் என்ற சொல்லை
நம்பி
சோரம் போனவன்  நான்
அதற்கும் என்னைக் காரணம் சொல்லி
காணாமல் போனவள்  நீ...

இப்போது இப்பதா தொலைவதா என்று

அழுவவனும் நானே