Thursday, June 30, 2011

அன்பே உனக்காக…

அன்பே உனக்காக…

அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்
நீ!

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்

உன் பெயர்
தென்பட்ட இடமெல்லாம்
தேன்பட்ட இடம்.

நீ பேசும்போது மட்டும்
என் செல்பேசி
செல்சிணுங்கி.

மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்.

செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது.

உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
ஒரு பருக்கைப் போதும்.
என் காதல் பசியாற!

வெட்கத்தோடு
நீ பேசுகையில் புரிகிறது…
தமிழ் செம்மொழிதான்

Sunday, June 19, 2011

உன்னை நினைத்தபடி

  உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்
உன் நினைவுகளுடன் வாழ்ந்தேன்..
நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்...
கனவில் இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனதுஎன்று புரிந்து கொண்டேன்...

நீ இல்லாதபொழுதுகளும்

       நீ இல்லாதபொழுதுகளும்
நன்றாகத்தான்இருக்கின்றன
இப்போதுதான்உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்
நீ
ஓடிப்போகலாமாஎனக்கேட்டதும்
நான்
தயாராவதற்குள்என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?
உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !
நான் தாடி வைத்தால்
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !

நான் கொண்ட அன்பு

அன்பே
உன்மீது நான் கொண்ட அன்பு
 காதல் என்பதா காமம் என்பதா
ஆனால் உன்மீது கொண்ட அன்பை
அளவிட கருவி இருப்பின்  கூறி விடு
என்றும் உன் நினைவோடு  வாழ்வேன்
உன் முழுமையான அன்பை வேண்டி
உனக்காக வாழ்ந்த இந்த சில  காலம்  போதுமே
 

Saturday, June 18, 2011

ஆனந்தமாய்

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்