Saturday, October 1, 2011

சாவதை விட

அன்பே நீ சிரித்து பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்
 இன்று
 நினைக்கையில் என்மனதில் முள்ளாய் குத்துகின்றது
 பிரிந்து செல்வாய் என முன்பே தெரிந்து இருந்தால்
அன்றே
 இறந்திருப்பேன்
 இன்று அணு அணுவாய் சாவதை விட

Monday, September 19, 2011

காதலை விட ...........

காதல் கிடைக்காதவர்களும்
காதலில் தோற்றவர்களும்
ஏனோ
இந்த காதலை அசிங்கபடுத்துகிறார்கள்.....
உண்மையில்
ஒரு நொடி காதல் என்றாலும்
அதன் சுகம் தனி தான் ...
காதல் திருமணத்தில் முடிந்தால் தான்
உண்மை காதல் என்கிறார்கள்......
அப்படி என்றால்
உண்மையாய் திருமணதிற்கு பின்
காதல் செய்பவர்கள்
எத்தனை பேர் ?....
காதல்...
காதல் தான் ....
சேர்ந்தாலும்...
சேராமல் போனாலும்
சுகமானது தான்
உண்மை காதல் ...

Wednesday, August 10, 2011

காதலியே...

உன்னை
காதலிக்கையில்
மட்டும்
நான்
ஆதி மனிதனாய்
உன்னை பற்றி
மட்டுமே
சிந்திக்கிறேன்
-உனக்காகவே
ஒவ்வொன்றும் செய்கிறேன்
எனக்காக
வாழ்வதை
விட்டுவிட்டு
உனக்காகவே
வாழ்கிறேன் - அனால் நீயோ
என்னை
நாகரிகமாய்
மாற
சொல்கிறாய்
உனக்காகவே மாறினேன்
நான் என்ன
செய்ய அன்பே
மாறியபின்
நீ மட்டும்
அல்ல உன்னுடைய தோழிகளும்
என்னுடைய
காதலிகளாய்.

Thursday, August 4, 2011

உன்மீது

அன்பே நான் உன்மீது கொண்ட அன்பானது
பெரிதென கூற என்னால் முடியவில்லை
ஏன் தெரியுமா
நான் தான்உன்னை சுவசிகிரேனே
 பிறகு எப்படி
அன்பே உன்மீது கொண்டஅன்பு பெரிது என்பேன்

ஐயோ நான் ஒன்றும் திமுக ஆதரவாளன் அல்ல

  அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்
நீ!
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்
உன் பெயர்
தென்பட்ட இடமெல்லாம்
தேன்பட்ட இடம்.
நீ பேசும்போது மட்டும்
என் செல்பேசி
செல்சிணுங்கி.
மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்.
செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது.
உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
ஒரு பருக்கைப் போதும்.
என் காதல் பசியாற!
வெட்கத்தோடு
நீ பேசுகையில் புரிகிறது…
தமிழ் செம்மொழிதான்

Wednesday, August 3, 2011

நானில்லாத பொழுதுகள்

நானில்லாத பொழுதுகள் எப்படி உனக்கு கழிகிறது . 
அருகில் இருந்தால்... வெறுக்கிறாய்...
 தூரத்தில் இருந்தால் அணைக்க அழைக்கிறாய்.
 கண்ணுக்குள் என்னை நிறுத்தி காந்தர்வம் செய்கிறாய்....
.இமைகளை மூடி  உடலெங்கும் பரவி நான் உன் இதயத்திற்குள் சென்றுவிட்டேன்
காதலின் கருவறையா உன் இதயம்.
ஆதலால் தான்
அதிலிருந்து மீள விருப்பமில்லாமல் துடிக்கிறேன்..
ஒ....அதுதான்   வார்த்தையெல்லாம் கவிதையாய் 
என்  உயிரை உன் இதயத்தில் உள் நிறுத்தி , உடலை ஓட ஓட வைக்கிறாய்...  கோபம் கொள்ளாமல் நான்  என்ன செய்வது 
 நீ கேட்டதைத் தானே வாங்கி வந்தேன்  .
 நீ கேட்டு வாங்கி வந்ததனைத்தையும் வேண்டாம் என்கிறாய்.
ஒ மறுப்பு காதலின் உயரிய குணமோ.
 நீ செய்யும் எல்லா மறுப்புகளையுமே இரசிக்கேறேன் ...
  உன் சிரிப்பிற்கு ஏங்குகிறேன் .
 உன் மடியில்  வீழ்ந்து கிடக்க ஓடோடி வருகி வருகின்றேன் .
 அதையும் புரியாமல் துரத்துகிறாய்....!!!!
 இப்படி உன்னுள் நானில்லாத பொழுதுகள் எப்படி கழிகின்றன.....உனக்கு...!!!!!!

Saturday, July 2, 2011

அழுவவனும் நானே

அன்பே
சின்ன விஷயங்கள் நம்மை
சீண்டி பார்க்கின்றன..
சில நேரங்களில் என்னை நானே வெறுக்கின்றேன் .
இது சொல்ல முடியாத உறவு..
அள்ள முடியாத கனவு...
நீ சொன்ன வார்த்தைகள் என்னில்
இன்னும் முள்ளாய்...
உனக்கு தெரியுமா..
வெறுப்பது நீஎன்றாலும்
விரும்புவது நானல்லவா...?
உன்னைக்காணும் முன்
உன்னைக்கண்ட பின்
என என்னில் இரு வாழ்க்கை..
தோட்டத்தில் விதை விதைத்து
துளிர் வருவதற்குள்
மறைந்து போனவள்  நீ
உன் காதல் என்ற சொல்லை
நம்பி
சோரம் போனவன்  நான்
அதற்கும் என்னைக் காரணம் சொல்லி
காணாமல் போனவள்  நீ...

இப்போது இப்பதா தொலைவதா என்று

அழுவவனும் நானே

Thursday, June 30, 2011

அன்பே உனக்காக…

அன்பே உனக்காக…

அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்
நீ!

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்

உன் பெயர்
தென்பட்ட இடமெல்லாம்
தேன்பட்ட இடம்.

நீ பேசும்போது மட்டும்
என் செல்பேசி
செல்சிணுங்கி.

மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்.

செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது.

உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
ஒரு பருக்கைப் போதும்.
என் காதல் பசியாற!

வெட்கத்தோடு
நீ பேசுகையில் புரிகிறது…
தமிழ் செம்மொழிதான்

Sunday, June 19, 2011

உன்னை நினைத்தபடி

  உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்
உன் நினைவுகளுடன் வாழ்ந்தேன்..
நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்...
கனவில் இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனதுஎன்று புரிந்து கொண்டேன்...

நீ இல்லாதபொழுதுகளும்

       நீ இல்லாதபொழுதுகளும்
நன்றாகத்தான்இருக்கின்றன
இப்போதுதான்உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்
நீ
ஓடிப்போகலாமாஎனக்கேட்டதும்
நான்
தயாராவதற்குள்என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?
உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !
நான் தாடி வைத்தால்
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !

நான் கொண்ட அன்பு

அன்பே
உன்மீது நான் கொண்ட அன்பு
 காதல் என்பதா காமம் என்பதா
ஆனால் உன்மீது கொண்ட அன்பை
அளவிட கருவி இருப்பின்  கூறி விடு
என்றும் உன் நினைவோடு  வாழ்வேன்
உன் முழுமையான அன்பை வேண்டி
உனக்காக வாழ்ந்த இந்த சில  காலம்  போதுமே
 

Saturday, June 18, 2011

ஆனந்தமாய்

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

Saturday, April 2, 2011

ஆனந்தமாய்கூட

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்
உன்னிடம் என் காதல் இல்லாவிட்டாலும்
 என்னுடன் இருக்கும் காதல்
என் உயிர் உள்ளவரை உன்னை தொடரும்

.உன் நினைவுகளுடன்

நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்கனவில்
இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனது
என்று
புரிந்து கொண்டேன்...
உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் 

உள்ளம் தேடு கிறது

விளையாட்டு 
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.

எத்தனை முறை இவ்வாறு  இருப்பேன்
உன் நினைவுளுடன் பார்ப்பவரை  எல்லாம்
உன்னை போலாவது இருக்க மாட்டலா என உள்ளம் தேடு கிறது
ஏன்னடி  இந்த நரக வேதனை  தந்தாய்



Saturday, March 26, 2011

அன்பே நீ

உன்னுடன் பேசாத காலங்களின் 
நிஷப்ததிலும்
 மவுனத்தின் மொழி னிலும்
 உன் பிரிவு என்வளவு கொடுமை ஆனது
  என்பதை உன் பிரிவினில் உணர்கிறேன் 
எவ்வளவு காலம் ஆனாலும் இதை நான் தாங்கி கொள்வேன்
 அன்பே நீ ?

Monday, February 14, 2011

பிரிவு


பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே…?
பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை…?
இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.
ம்…
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று

முத்தமழை


என் கன்னத்தில் பதிந்த முத்தம்
என் உடலெங்கும் தொடர!

வான்மகள் முத்தமழை - சொரிந்துகொண்டிருந்தால்!

மின்னலென 
கண் விழித்து பார்த்தால்!

என் அங்கம் மறைத்திருந்ததோ
ஓர் கந்தல் துணி!

எள்ளி நகையாடினால் இடியென!

வெட்கத்தில் நிலவு மகளும்
அடைக்கலம் புகுந்தால்
மேகமகளிடம்!

ஓடினேன் சத்திரம் தேடி !

என் சாலையோர தூக்கத்தை மழை கலைத்ததால் 

Sunday, February 13, 2011

தேடல்

காதலின் தேடல் இளமையில்…
அன்பின் தேடல் முதுமையில்…
வாழ்கையின் தேடல் எளிமையில்…
பதவியின் தேடல் தலைமையில்…
இன்பத்தின் தேடல் பன்மையில்…
துன்பத்தின் தேடல் பொருமையில்…
சந்தோஷத்தின் தேடல் பெருமையில்…
கோபத்தின் தேடல் வன்மையில்…
வெற்றியின் தேடல் வலிமையில்…
தோல்வியின் தேடல் வெறுமையில்…
உண்மையின் தேடல் பொய்மையில்…
பொய்யான தேடல் உண்மையில்.




என் மனம்


பெண்ணே
உன்னிடம் என் காதலை சொல்ல என் வெளி மனது ஆஷிட்டது 
ஆனால்
ஆழமான  நம் நட்பு  காதலாகுமா 
என்கிறது  என் உள்மனம்
 இவை இரண்டிலும் மாட்டி  தவிக்கிறது
  என் ஆள் மனம்
கூறடி பெண்ணே
 இதில் நான் என்ன செய்வன் 

என் மரண நிலை

என்னவளே
உன்னோடு மனம்விட்டுப்பேச
என் இதயம்
தினம் தினம் துடிப்பதேனோ

உன்னோடு நடை பழக
என் இரு பாதங்களும்
உனைத் தேடி வருவதேனோ

உனைப் பார்க்காமல்
என் இரு விழிகளும்
தூங்கும் போதும்
மூட மறுப்பதேனோ

உன்னைச் சேராமல்
என் இதயம் தினம் தினம்
கண்ணீர் மழை பொழிவதேனோ

என்னவளே
உனக்கு என்
மரண நிலை
புரியவில்லை ஏனோ

Friday, February 11, 2011

காதலும் நட்பும்

  கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!

நட்பு

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்

காதல்

தோல்வியின் சின்னம்
தாஜ்மஹால்
வெற்றியின் சின்னம்
இதுவரை இல்லை
ஜெயித்தவன்
காதலை மதிப்பதில்லை
தோற்றவன்
காதலை மறப்பதில்லை"

Monday, January 31, 2011

காதல் பரிசு……….!

உன்னையே உலகம் என்று
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே………………!

தெரிந்தே நீ எனக்கு தந்த
இந்த பரிசை
என் வாழ் நாள் முழுதும்
நான் சுமக்கத்தான்
வேண்டுமா…………..?

இல்லை
ஈரமே இல்லா
மனம் கொண்ட நீ
கொடுத்த இந்த பரிசை
தூக்கி ஏறிவதா………….?
தெரியவில்லை எனக்கு……….?

நினைத்து விடுவது இலகு தான்
மறப்பது கடினம்
புரிகின்றது இன்று…!
துயவானாய் நீ இருந்தால்
சுமந்திருப்பேன் இப்பரிசை…..!

ஆனால்………..!

என் உண்மையான
அன்பை புரிந்துக்கொள்ள
தெரியாத பிறவி
நீ கொடுத்த இப்பரிசு மட்டும்
எனக்கு எதற்கு….?
தேவையே இல்லை………..!

அன்னை

அன்னையின் சிரிப்பில் அன்பு இர்ருக்கும்.... 
மனைவியின் சிரிப்பில் பாசம் இருக்கும்.... 
தோழியின் சிரிப்பில் நேசம் இருக்கும்.... 
உறவின் சிரிப்பில் சந்தோசம் இருக்கும்... 
எதிரியின் சிரிப்பில் துரோகம் இருக்கும்.... 
குழந்தைன் சிரிப்பில் இறைவன் இருப்பான்... 
உன் சிரிப்பில்என் உலகம் இருக்கும் .

நட்பு

மனசும் மனசும் பேசி கொண்டால் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது
உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாக தோணும்
உயிருக்கு உயிராய் இருந்து உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து உயிர் கொடுக்கும் நட்பு மேலானது
நான் உன் உயிர் தோழனாக  இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக   இருப்பேன்..

Sunday, January 30, 2011

நீ வேண்டும் எனக்கு

ஒவ்வொரு இரவும்
நீ வந்து
தாலாட்டினாலும்
ஒரு நொடியில் - என்
மனதை உடைத்தவள் - நீ
உனக்காக உருகியது
என்னிதயம்...

இதயங்கள் ஒன்றாக
சேர்ந்த பின்
அன்பின் பரிமாணங்கள்
பல வடிவில் தந்தாய்...

நிரந்தரமாக நீ வேண்டும்
எனக்கு...
என் மனதை பிடித்தாட் போல்
உடலையும் பிடித்தாய்...
மறவாமல் - உன்
அன்பினை வாரி வழங்குகிறாய்
என்னால் முடியவில்லை...
நம் உறவுக்கு
உயிரூட்ட முடியவில்லை...

உன் உறவு வேண்டும்
என் உயிருள்ளவரை...
என்றும் காத்திருபேன்
உனக்காக

என் மரண நிலை


என்னவளே
உன்னோடு மனம்விட்டுப்பேச
என் இதயம்
தினம் தினம் துடிப்பதேனோ

உன்னோடு நடை பழக
என் இரு பாதங்களும்
உனைத் தேடி வருவதேனோ

உனைப் பார்க்காமல்
என் இரு விழிகளும்
தூங்கும் போதும்
மூட மறுப்பதேனோ

உன்னைச் சேராமல்
என் இதயம் தினம் தினம்
கண்ணீர் மழை பொழிவதேனோ


என்னவளே
உனக்கு என்
மரண நிலை
புரியவில்லை ஏனோ

Wednesday, January 26, 2011

எம்இனம் அழிவிக்க

மேதி (சோனியா )வென்று வந்தாள்    எம்இனம் அழிவிக்க
ண்டவன் (தலைவர் )வருவான்   எம்இனம் காக்க
ளைஞர்   படை ஒன்றானால்
ழம் வருமடா  எம்மிடம்
ன்னை இணை  நம்மிடம்
க்கம்  உடன் வருவம்
ம் இன விடுதலை வித்தாக்க
க்கத்துடன் காத்து இருப்போரின்  தூயர் துடைக்க
யம் கொள்ளதீர் அண்மையில் நம் இனத்தை
ருமைப்படுத்த   எம்மவன் வருவான்
டி வாரீர் எம் இனமே  ஒன்று படுவீர் எம்இனம் காக்க

நட்புகளை சுவாசிப்பம்.

நட்பு பூப்பதற்கு சலனமோ, அர்த்தமற்ற உணர்ச்சிகளோ தேவையில்லை...
நட்பு உறவாட உங்கள் மனதில் சிறு வேர் தழைத்து இருந்தாலே போதுமானது!
வார்த்தைகளில் பரிமாறப்படும் தோழமை அதற்கு உயிர் கொடுத்து தழைக்க செய்து விடும்!
ஒரு இதயம் துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்
ஆனால்
அது நின்ற பிறகு எல்லோறும் துடிப்பார்கள்.
உறவுகளை நேசிப்போம் ..நட்புகளை சுவாசிப்பம்....

Friday, January 21, 2011

கசக்கி பிழிந்து..............

ன் இதயத்தை கசக்கி
பிழிந்து என் உயிரை
உருவி எடுத்து உபயோகமற்ற
என் இதயத்தை கண்ணீருடன்
காண்கிறேன்....நான் அதில்
உன் உருவம் மட்டும்
அழியாத சித்திரமாய் !!!
தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே

உன் முகம்

உன் முகம் தெரியாது எனக்கு
ஆனால் உன் "முக" வரி தெரியும்.
கலகலவென சிரிக்கும் உன் எழுத்துக்களின் ஓசை கேட்டதுண்டு
ஆனால் உன் குரலோசை கேட்டதில்லை
படபடவென பாயும் உன் வார்த்தைகள் பார்த்ததுண்டு
ஆனால் உன் பாதம் செல்லும் தடம் பார்த்ததில்லை
காற்றில் எங்கும் உன் குரலோசை " லங்கா "சீமையிலே
ஆனால் காற்றே இல்லாமல் சுவாசிக்கிறேன் உன் நட்பை" இந்திய "சீமையிலே
விரல் கொடுத்தாய் பற்றி கொள்வேன்
தடம் பார்த்து கூட்டி செல்கிறாய் என
வருகிறேன் நானும் நட்பெனும் உலகிற்கு.

Thursday, January 20, 2011

மணமேடையில் நீ........

மரணத்தின் கடைசி
தருவாயில் - நான்
எதையோ எதிர்பார்த்தபடி...
எமனும் பரிதவிக்கிறான்
என் நிலையை கண்டு...
எப்படி சொல்வேன்
என் நிலைமையை
மற்றவர்க்கு...
மணமேடையில் நீ
மற்றவனோடு....

என் உயிரை..........

 என் இதயத்தை கசக்கி
பிழிந்து என் உயிரை
உருவி எடுத்து உபயோகமற்ற
என் இதயத்தை கண்ணீருடன்
காண்கிறேன்....நான் அதில்
உன் உருவம் மட்டும்
அழியாத சித்திரமாய் !!!

தொலைக்க நினைத்தாலும்

 பிறப்பை நான்
 பிறந்து உணர்ந்தேன்
இறப்பை இறக்கமலே உணர்கிரன்
 நீ
என் அருக்கில் இல்லாத போது
தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே

Wednesday, January 19, 2011

மலரே...

நீ உதிர்ந்து விழ
உனக்கு ஆசை இல்லை
உன்னை பறித்து செல்ல
எனக்கும் விருப்பமில்லை
ஆனால் நீ புனிதமாவதர்க்கு
இதை தவிர வேறு
வழியுமில்லை
என்னவள் கூந்தலில் நீ
இருப்பதினால் புனிதமானாய்
உனக்கு உதவிசெய்த
என்னுடைய
காதலையும் சொல்லிவிடு
அவளது காதோரமாய்...

எல்லா முயற்சியும்

உலகத்தில் எல்லா முயற்சியும்
யுத்தம்தான்.
வெற்றியில் விருப்பமெனில் வலி தாங்கு.
புழுங்கிச்சாவதை விட போரிட்டு மடிவது உத்தமம்.
வெறும் கனவுப் படுக்கையில் நோயுற்றுச் சாவதைவிட யுத்த நினைவுகளான
அம்புப்படுக்கையில் பீஷ்மநென மடிவது மேல்.

இவ்விதி புரிந்தவருக்கு போர் எளிது. வாழ்க்கையும் ருசிக்கும்.

கண்ணீராக......!!

நான் உன்னிடம் கொண்டுள்ள நட்பானது
இன்று நீ எனை பிரிந்தாலும்....மறந்தாலும்............
என்றாவது நீ என்னை நினைக்கும்போது
நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக......!!

ஒரு விடியலை எண்ணி என் மனம்...

இனிமையான காலை பொழுது
அள்ளி தெளித்த பனித்துளிகள்
பசுமையான புள்ளின் வழர்ச்சி
வாசமாய் மாளிகை பூக்கள்
சிட்டுக்குருவியின் கீச்சுக் குரல்கள்
குட்டி குழந்தையின் செல்ல அழுகை
அன்பு அப்பாவின் சின்ன குறட்டை
ஆசை அம்மாவின் தேநீர் குவளை
இதனையும் தோற்றதடி எனக்கு
உள்ளத்தில் கண் சிமிட்டிய
உன் முகம் கண்டவுடன்
தினமும் காணும் இவையெல்லாம்
இன்று மட்டும் புதுமையாய்
தெரிகிறது நீ வந்ததினால்!
எல்லாம் இருக்கட்டும் எப்படி
வந்தாய் என்னுள் நீ !
என்னுடைய அனுமதியின்றி

நீயும் என்னிடம் இல்லை

 அன்பு இல்லாத உறவுகள் இல்லை
ஆசை இல்லாத மனிதன் இல்லை
இரக்கம் இல்லாமல்  மனிதன் இல்லை
ஈகை இல்லாத மதமும் இல்லை
உணர்வுகள் இல்லாத உயிரும் இல்லை
ஊடல் இல்லாத காதலும் இல்லை
கனவுகள் இல்லாத கண்களும் இல்லை,
காதல் இல்லாமல் மனிதன்  இல்லை
பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை
நட்பு இல்லாத இதயம் இல்லை.
தாலாட்டு பாடாத தாயும் இல்லை  
தாகம் தீர்க்காமல்  தண்ணீரும் இல்லை
தாய் பாசம் இல்லாத உயரிரும்  இல்லை
இப்படியே நான் எழுதினால்  இதை படிக்க நீயும்  என்னிடம் இல்லை

Tuesday, January 18, 2011

அன்பே

பெண்ணே நீ

நீ பல கவிதை க்கு சொந்த காரி என நினைத்தேன்
 ஆனால்
 நீ பல கல்லறைகளுக்கும் சொந்த காரி
 என
பின்புதான் தெரிந்தது

உன் நினைவுகள்...



மனதினுள் நீயும்
உயிருக்குள் உன் நினைவும்
உன் உணர்வுகளுடன்
என் உணர்வும்
இருக்கும் போது
உன்னை மறப்பது
சாத்தியமா?
சாதனைதான்!!!
சிரிக்க மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
தவிக்கவும்
கற்று கொடுத்து விட்டாயே...

நீ என்னை நேசித்தாய்.....

 நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஒரு மூலையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்.....


என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுப்பதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை......

நான் ஒன்றும் மகான் கிடையாதே!

நானும் ஒரு
மனிதப் பிறவிதானே!

தவறு என் மேலா...?
தயங்காமல் தட்டிச் சொல்!

தயக்கம் எதுவுமின்றி
நானும்
தவறுகளை
திருத்திக் கொள்கின்றேன்.

ஆனால்...
என்னை தண்டிப்பதாய்
நினைத்து
தனியே தவிக்க விட்டு
தள்ளிச் சென்று விடாதே!

அதனை
தாங்காது என் இதயம்!