Wednesday, August 10, 2011

காதலியே...

உன்னை
காதலிக்கையில்
மட்டும்
நான்
ஆதி மனிதனாய்
உன்னை பற்றி
மட்டுமே
சிந்திக்கிறேன்
-உனக்காகவே
ஒவ்வொன்றும் செய்கிறேன்
எனக்காக
வாழ்வதை
விட்டுவிட்டு
உனக்காகவே
வாழ்கிறேன் - அனால் நீயோ
என்னை
நாகரிகமாய்
மாற
சொல்கிறாய்
உனக்காகவே மாறினேன்
நான் என்ன
செய்ய அன்பே
மாறியபின்
நீ மட்டும்
அல்ல உன்னுடைய தோழிகளும்
என்னுடைய
காதலிகளாய்.

Thursday, August 4, 2011

உன்மீது

அன்பே நான் உன்மீது கொண்ட அன்பானது
பெரிதென கூற என்னால் முடியவில்லை
ஏன் தெரியுமா
நான் தான்உன்னை சுவசிகிரேனே
 பிறகு எப்படி
அன்பே உன்மீது கொண்டஅன்பு பெரிது என்பேன்

ஐயோ நான் ஒன்றும் திமுக ஆதரவாளன் அல்ல

  அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்
நீ!
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்
உன் பெயர்
தென்பட்ட இடமெல்லாம்
தேன்பட்ட இடம்.
நீ பேசும்போது மட்டும்
என் செல்பேசி
செல்சிணுங்கி.
மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்.
செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது.
உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
ஒரு பருக்கைப் போதும்.
என் காதல் பசியாற!
வெட்கத்தோடு
நீ பேசுகையில் புரிகிறது…
தமிழ் செம்மொழிதான்

Wednesday, August 3, 2011

நானில்லாத பொழுதுகள்

நானில்லாத பொழுதுகள் எப்படி உனக்கு கழிகிறது . 
அருகில் இருந்தால்... வெறுக்கிறாய்...
 தூரத்தில் இருந்தால் அணைக்க அழைக்கிறாய்.
 கண்ணுக்குள் என்னை நிறுத்தி காந்தர்வம் செய்கிறாய்....
.இமைகளை மூடி  உடலெங்கும் பரவி நான் உன் இதயத்திற்குள் சென்றுவிட்டேன்
காதலின் கருவறையா உன் இதயம்.
ஆதலால் தான்
அதிலிருந்து மீள விருப்பமில்லாமல் துடிக்கிறேன்..
ஒ....அதுதான்   வார்த்தையெல்லாம் கவிதையாய் 
என்  உயிரை உன் இதயத்தில் உள் நிறுத்தி , உடலை ஓட ஓட வைக்கிறாய்...  கோபம் கொள்ளாமல் நான்  என்ன செய்வது 
 நீ கேட்டதைத் தானே வாங்கி வந்தேன்  .
 நீ கேட்டு வாங்கி வந்ததனைத்தையும் வேண்டாம் என்கிறாய்.
ஒ மறுப்பு காதலின் உயரிய குணமோ.
 நீ செய்யும் எல்லா மறுப்புகளையுமே இரசிக்கேறேன் ...
  உன் சிரிப்பிற்கு ஏங்குகிறேன் .
 உன் மடியில்  வீழ்ந்து கிடக்க ஓடோடி வருகி வருகின்றேன் .
 அதையும் புரியாமல் துரத்துகிறாய்....!!!!
 இப்படி உன்னுள் நானில்லாத பொழுதுகள் எப்படி கழிகின்றன.....உனக்கு...!!!!!!