Monday, January 31, 2011

காதல் பரிசு……….!

உன்னையே உலகம் என்று
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே………………!

தெரிந்தே நீ எனக்கு தந்த
இந்த பரிசை
என் வாழ் நாள் முழுதும்
நான் சுமக்கத்தான்
வேண்டுமா…………..?

இல்லை
ஈரமே இல்லா
மனம் கொண்ட நீ
கொடுத்த இந்த பரிசை
தூக்கி ஏறிவதா………….?
தெரியவில்லை எனக்கு……….?

நினைத்து விடுவது இலகு தான்
மறப்பது கடினம்
புரிகின்றது இன்று…!
துயவானாய் நீ இருந்தால்
சுமந்திருப்பேன் இப்பரிசை…..!

ஆனால்………..!

என் உண்மையான
அன்பை புரிந்துக்கொள்ள
தெரியாத பிறவி
நீ கொடுத்த இப்பரிசு மட்டும்
எனக்கு எதற்கு….?
தேவையே இல்லை………..!

அன்னை

அன்னையின் சிரிப்பில் அன்பு இர்ருக்கும்.... 
மனைவியின் சிரிப்பில் பாசம் இருக்கும்.... 
தோழியின் சிரிப்பில் நேசம் இருக்கும்.... 
உறவின் சிரிப்பில் சந்தோசம் இருக்கும்... 
எதிரியின் சிரிப்பில் துரோகம் இருக்கும்.... 
குழந்தைன் சிரிப்பில் இறைவன் இருப்பான்... 
உன் சிரிப்பில்என் உலகம் இருக்கும் .

நட்பு

மனசும் மனசும் பேசி கொண்டால் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது
உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாக தோணும்
உயிருக்கு உயிராய் இருந்து உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து உயிர் கொடுக்கும் நட்பு மேலானது
நான் உன் உயிர் தோழனாக  இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக   இருப்பேன்..

Sunday, January 30, 2011

நீ வேண்டும் எனக்கு

ஒவ்வொரு இரவும்
நீ வந்து
தாலாட்டினாலும்
ஒரு நொடியில் - என்
மனதை உடைத்தவள் - நீ
உனக்காக உருகியது
என்னிதயம்...

இதயங்கள் ஒன்றாக
சேர்ந்த பின்
அன்பின் பரிமாணங்கள்
பல வடிவில் தந்தாய்...

நிரந்தரமாக நீ வேண்டும்
எனக்கு...
என் மனதை பிடித்தாட் போல்
உடலையும் பிடித்தாய்...
மறவாமல் - உன்
அன்பினை வாரி வழங்குகிறாய்
என்னால் முடியவில்லை...
நம் உறவுக்கு
உயிரூட்ட முடியவில்லை...

உன் உறவு வேண்டும்
என் உயிருள்ளவரை...
என்றும் காத்திருபேன்
உனக்காக

என் மரண நிலை


என்னவளே
உன்னோடு மனம்விட்டுப்பேச
என் இதயம்
தினம் தினம் துடிப்பதேனோ

உன்னோடு நடை பழக
என் இரு பாதங்களும்
உனைத் தேடி வருவதேனோ

உனைப் பார்க்காமல்
என் இரு விழிகளும்
தூங்கும் போதும்
மூட மறுப்பதேனோ

உன்னைச் சேராமல்
என் இதயம் தினம் தினம்
கண்ணீர் மழை பொழிவதேனோ


என்னவளே
உனக்கு என்
மரண நிலை
புரியவில்லை ஏனோ

Wednesday, January 26, 2011

எம்இனம் அழிவிக்க

மேதி (சோனியா )வென்று வந்தாள்    எம்இனம் அழிவிக்க
ண்டவன் (தலைவர் )வருவான்   எம்இனம் காக்க
ளைஞர்   படை ஒன்றானால்
ழம் வருமடா  எம்மிடம்
ன்னை இணை  நம்மிடம்
க்கம்  உடன் வருவம்
ம் இன விடுதலை வித்தாக்க
க்கத்துடன் காத்து இருப்போரின்  தூயர் துடைக்க
யம் கொள்ளதீர் அண்மையில் நம் இனத்தை
ருமைப்படுத்த   எம்மவன் வருவான்
டி வாரீர் எம் இனமே  ஒன்று படுவீர் எம்இனம் காக்க

நட்புகளை சுவாசிப்பம்.

நட்பு பூப்பதற்கு சலனமோ, அர்த்தமற்ற உணர்ச்சிகளோ தேவையில்லை...
நட்பு உறவாட உங்கள் மனதில் சிறு வேர் தழைத்து இருந்தாலே போதுமானது!
வார்த்தைகளில் பரிமாறப்படும் தோழமை அதற்கு உயிர் கொடுத்து தழைக்க செய்து விடும்!
ஒரு இதயம் துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்
ஆனால்
அது நின்ற பிறகு எல்லோறும் துடிப்பார்கள்.
உறவுகளை நேசிப்போம் ..நட்புகளை சுவாசிப்பம்....

Friday, January 21, 2011

கசக்கி பிழிந்து..............

ன் இதயத்தை கசக்கி
பிழிந்து என் உயிரை
உருவி எடுத்து உபயோகமற்ற
என் இதயத்தை கண்ணீருடன்
காண்கிறேன்....நான் அதில்
உன் உருவம் மட்டும்
அழியாத சித்திரமாய் !!!
தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே

உன் முகம்

உன் முகம் தெரியாது எனக்கு
ஆனால் உன் "முக" வரி தெரியும்.
கலகலவென சிரிக்கும் உன் எழுத்துக்களின் ஓசை கேட்டதுண்டு
ஆனால் உன் குரலோசை கேட்டதில்லை
படபடவென பாயும் உன் வார்த்தைகள் பார்த்ததுண்டு
ஆனால் உன் பாதம் செல்லும் தடம் பார்த்ததில்லை
காற்றில் எங்கும் உன் குரலோசை " லங்கா "சீமையிலே
ஆனால் காற்றே இல்லாமல் சுவாசிக்கிறேன் உன் நட்பை" இந்திய "சீமையிலே
விரல் கொடுத்தாய் பற்றி கொள்வேன்
தடம் பார்த்து கூட்டி செல்கிறாய் என
வருகிறேன் நானும் நட்பெனும் உலகிற்கு.

Thursday, January 20, 2011

மணமேடையில் நீ........

மரணத்தின் கடைசி
தருவாயில் - நான்
எதையோ எதிர்பார்த்தபடி...
எமனும் பரிதவிக்கிறான்
என் நிலையை கண்டு...
எப்படி சொல்வேன்
என் நிலைமையை
மற்றவர்க்கு...
மணமேடையில் நீ
மற்றவனோடு....

என் உயிரை..........

 என் இதயத்தை கசக்கி
பிழிந்து என் உயிரை
உருவி எடுத்து உபயோகமற்ற
என் இதயத்தை கண்ணீருடன்
காண்கிறேன்....நான் அதில்
உன் உருவம் மட்டும்
அழியாத சித்திரமாய் !!!

தொலைக்க நினைத்தாலும்

 பிறப்பை நான்
 பிறந்து உணர்ந்தேன்
இறப்பை இறக்கமலே உணர்கிரன்
 நீ
என் அருக்கில் இல்லாத போது
தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே

Wednesday, January 19, 2011

மலரே...

நீ உதிர்ந்து விழ
உனக்கு ஆசை இல்லை
உன்னை பறித்து செல்ல
எனக்கும் விருப்பமில்லை
ஆனால் நீ புனிதமாவதர்க்கு
இதை தவிர வேறு
வழியுமில்லை
என்னவள் கூந்தலில் நீ
இருப்பதினால் புனிதமானாய்
உனக்கு உதவிசெய்த
என்னுடைய
காதலையும் சொல்லிவிடு
அவளது காதோரமாய்...

எல்லா முயற்சியும்

உலகத்தில் எல்லா முயற்சியும்
யுத்தம்தான்.
வெற்றியில் விருப்பமெனில் வலி தாங்கு.
புழுங்கிச்சாவதை விட போரிட்டு மடிவது உத்தமம்.
வெறும் கனவுப் படுக்கையில் நோயுற்றுச் சாவதைவிட யுத்த நினைவுகளான
அம்புப்படுக்கையில் பீஷ்மநென மடிவது மேல்.

இவ்விதி புரிந்தவருக்கு போர் எளிது. வாழ்க்கையும் ருசிக்கும்.

கண்ணீராக......!!

நான் உன்னிடம் கொண்டுள்ள நட்பானது
இன்று நீ எனை பிரிந்தாலும்....மறந்தாலும்............
என்றாவது நீ என்னை நினைக்கும்போது
நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக......!!

ஒரு விடியலை எண்ணி என் மனம்...

இனிமையான காலை பொழுது
அள்ளி தெளித்த பனித்துளிகள்
பசுமையான புள்ளின் வழர்ச்சி
வாசமாய் மாளிகை பூக்கள்
சிட்டுக்குருவியின் கீச்சுக் குரல்கள்
குட்டி குழந்தையின் செல்ல அழுகை
அன்பு அப்பாவின் சின்ன குறட்டை
ஆசை அம்மாவின் தேநீர் குவளை
இதனையும் தோற்றதடி எனக்கு
உள்ளத்தில் கண் சிமிட்டிய
உன் முகம் கண்டவுடன்
தினமும் காணும் இவையெல்லாம்
இன்று மட்டும் புதுமையாய்
தெரிகிறது நீ வந்ததினால்!
எல்லாம் இருக்கட்டும் எப்படி
வந்தாய் என்னுள் நீ !
என்னுடைய அனுமதியின்றி

நீயும் என்னிடம் இல்லை

 அன்பு இல்லாத உறவுகள் இல்லை
ஆசை இல்லாத மனிதன் இல்லை
இரக்கம் இல்லாமல்  மனிதன் இல்லை
ஈகை இல்லாத மதமும் இல்லை
உணர்வுகள் இல்லாத உயிரும் இல்லை
ஊடல் இல்லாத காதலும் இல்லை
கனவுகள் இல்லாத கண்களும் இல்லை,
காதல் இல்லாமல் மனிதன்  இல்லை
பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை
நட்பு இல்லாத இதயம் இல்லை.
தாலாட்டு பாடாத தாயும் இல்லை  
தாகம் தீர்க்காமல்  தண்ணீரும் இல்லை
தாய் பாசம் இல்லாத உயரிரும்  இல்லை
இப்படியே நான் எழுதினால்  இதை படிக்க நீயும்  என்னிடம் இல்லை

Tuesday, January 18, 2011

அன்பே

பெண்ணே நீ

நீ பல கவிதை க்கு சொந்த காரி என நினைத்தேன்
 ஆனால்
 நீ பல கல்லறைகளுக்கும் சொந்த காரி
 என
பின்புதான் தெரிந்தது

உன் நினைவுகள்...



மனதினுள் நீயும்
உயிருக்குள் உன் நினைவும்
உன் உணர்வுகளுடன்
என் உணர்வும்
இருக்கும் போது
உன்னை மறப்பது
சாத்தியமா?
சாதனைதான்!!!
சிரிக்க மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
தவிக்கவும்
கற்று கொடுத்து விட்டாயே...

நீ என்னை நேசித்தாய்.....

 நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஒரு மூலையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்.....


என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுப்பதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை......

நான் ஒன்றும் மகான் கிடையாதே!

நானும் ஒரு
மனிதப் பிறவிதானே!

தவறு என் மேலா...?
தயங்காமல் தட்டிச் சொல்!

தயக்கம் எதுவுமின்றி
நானும்
தவறுகளை
திருத்திக் கொள்கின்றேன்.

ஆனால்...
என்னை தண்டிப்பதாய்
நினைத்து
தனியே தவிக்க விட்டு
தள்ளிச் சென்று விடாதே!

அதனை
தாங்காது என் இதயம்!