Wednesday, August 3, 2011

நானில்லாத பொழுதுகள்

நானில்லாத பொழுதுகள் எப்படி உனக்கு கழிகிறது . 
அருகில் இருந்தால்... வெறுக்கிறாய்...
 தூரத்தில் இருந்தால் அணைக்க அழைக்கிறாய்.
 கண்ணுக்குள் என்னை நிறுத்தி காந்தர்வம் செய்கிறாய்....
.இமைகளை மூடி  உடலெங்கும் பரவி நான் உன் இதயத்திற்குள் சென்றுவிட்டேன்
காதலின் கருவறையா உன் இதயம்.
ஆதலால் தான்
அதிலிருந்து மீள விருப்பமில்லாமல் துடிக்கிறேன்..
ஒ....அதுதான்   வார்த்தையெல்லாம் கவிதையாய் 
என்  உயிரை உன் இதயத்தில் உள் நிறுத்தி , உடலை ஓட ஓட வைக்கிறாய்...  கோபம் கொள்ளாமல் நான்  என்ன செய்வது 
 நீ கேட்டதைத் தானே வாங்கி வந்தேன்  .
 நீ கேட்டு வாங்கி வந்ததனைத்தையும் வேண்டாம் என்கிறாய்.
ஒ மறுப்பு காதலின் உயரிய குணமோ.
 நீ செய்யும் எல்லா மறுப்புகளையுமே இரசிக்கேறேன் ...
  உன் சிரிப்பிற்கு ஏங்குகிறேன் .
 உன் மடியில்  வீழ்ந்து கிடக்க ஓடோடி வருகி வருகின்றேன் .
 அதையும் புரியாமல் துரத்துகிறாய்....!!!!
 இப்படி உன்னுள் நானில்லாத பொழுதுகள் எப்படி கழிகின்றன.....உனக்கு...!!!!!!

No comments:

Post a Comment