என் கன்னத்தில் பதிந்த முத்தம்
என் உடலெங்கும் தொடர!
வான்மகள் முத்தமழை - சொரிந்துகொண்டிருந்தால்!
மின்னலென
கண் விழித்து பார்த்தால்!
என் அங்கம் மறைத்திருந்ததோ
ஓர் கந்தல் துணி!
எள்ளி நகையாடினால் இடியென!
வெட்கத்தில் நிலவு மகளும்
அடைக்கலம் புகுந்தால்
மேகமகளிடம்!
ஓடினேன் சத்திரம் தேடி !
என் சாலையோர தூக்கத்தை மழை கலைத்ததால்
No comments:
Post a Comment