Thursday, June 30, 2011

அன்பே உனக்காக…

அன்பே உனக்காக…

அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்
நீ!

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்

உன் பெயர்
தென்பட்ட இடமெல்லாம்
தேன்பட்ட இடம்.

நீ பேசும்போது மட்டும்
என் செல்பேசி
செல்சிணுங்கி.

மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்.

செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது.

உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
ஒரு பருக்கைப் போதும்.
என் காதல் பசியாற!

வெட்கத்தோடு
நீ பேசுகையில் புரிகிறது…
தமிழ் செம்மொழிதான்

No comments:

Post a Comment