என்னவளே
உன்னோடு மனம்விட்டுப்பேச
என் இதயம்
தினம் தினம் துடிப்பதேனோ
உன்னோடு நடை பழக
என் இரு பாதங்களும்
உனைத் தேடி வருவதேனோ
உனைப் பார்க்காமல்
என் இரு விழிகளும்
தூங்கும் போதும்
மூட மறுப்பதேனோ
உன்னைச் சேராமல்
என் இதயம் தினம் தினம்
கண்ணீர் மழை பொழிவதேனோ
என்னவளே
உனக்கு என்
மரண நிலை
புரியவில்லை ஏனோ
No comments:
Post a Comment