அன்பு இல்லாத உறவுகள் இல்லை
ஆசை இல்லாத மனிதன் இல்லை
இரக்கம் இல்லாமல் மனிதன் இல்லை
ஈகை இல்லாத மதமும் இல்லை
உணர்வுகள் இல்லாத உயிரும் இல்லை
ஊடல் இல்லாத காதலும் இல்லை
கனவுகள் இல்லாத கண்களும் இல்லை,
காதல் இல்லாமல் மனிதன் இல்லை
பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை
நட்பு இல்லாத இதயம் இல்லை.
தாலாட்டு பாடாத தாயும் இல்லை
தாகம் தீர்க்காமல் தண்ணீரும் இல்லை
தாய் பாசம் இல்லாத உயரிரும் இல்லை
இப்படியே நான் எழுதினால் இதை படிக்க நீயும் என்னிடம் இல்லை
No comments:
Post a Comment