Friday, January 21, 2011

உன் முகம்

உன் முகம் தெரியாது எனக்கு
ஆனால் உன் "முக" வரி தெரியும்.
கலகலவென சிரிக்கும் உன் எழுத்துக்களின் ஓசை கேட்டதுண்டு
ஆனால் உன் குரலோசை கேட்டதில்லை
படபடவென பாயும் உன் வார்த்தைகள் பார்த்ததுண்டு
ஆனால் உன் பாதம் செல்லும் தடம் பார்த்ததில்லை
காற்றில் எங்கும் உன் குரலோசை " லங்கா "சீமையிலே
ஆனால் காற்றே இல்லாமல் சுவாசிக்கிறேன் உன் நட்பை" இந்திய "சீமையிலே
விரல் கொடுத்தாய் பற்றி கொள்வேன்
தடம் பார்த்து கூட்டி செல்கிறாய் என
வருகிறேன் நானும் நட்பெனும் உலகிற்கு.

1 comment:

  1. அருமையான கவிதை இன்னும் நிறைய எழுதுங்கள்
    http://kavikilavan.blogspot.com/

    please change word verificcation

    ReplyDelete